சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல் பிளாஸ்மா வங்கி தொடக்கி இயங்கி வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 40 காவலர்கள் ஒரே நேரத்தில் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதுவரை 76 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை,மதுரை, நெல்லையில் பிளாஸ்மா வங்கி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.