சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் மறைமலைநகரில் நேற்று நடந்தது. பின்னர் தலைமை செயலர் கூறுகையில், ‘‘நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தற்போதுள்ள இ-பாஸ் முறையே தொடரும். அதில் தளர்வுகள் இருக்காது’’ என்றார்.