வேளச்சேரி: வேளச்சேரி பகுதியில் ஒரு சொகுசு காருக்குள் வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக நேற்று முன்தினம் வேளச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேளச்சேரி பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு சொகுசு கார் நீண்ட நேரம் நின்றிருப்பதை கண்டு சந்தேகித்தனர். காருக்குள் சோதனை செய்தபோது அதில் 2 பெண்கள் இருந்தனர். மற்றொரு காரில் 3 ஆண்கள் இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.