×

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:
புதுச்சேரியில் இப்போது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்திருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 14ம் தேதி(நாளை) முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும். இரவு 7 மணி முதல் 8 மணி வரை வீட்டிற்கு செல்ல நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முழுஊரடங்கை அமல் படுத்தியதால் சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. எனவே, புதுவையிலும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றார்.


Tags : Pondicherry , Puducherry, Tuesday, full curfew
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...