×

செல்போன் பறித்த இருவர் கைது

சென்னை: செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த ஜெகதீஷ் (30). என்பவரின் செல்போனை கடந்த 25ம் தேதி பைக்கில் வந்த 2 பேர் பறித்தனர். இதேபோல், சாலையில் நடந்து சென்ற பெண் உட்பட 3 பேரிடம் செல்போனை பறித்தனர். புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணாநகர் பிரேம்குமார் (20), அயனாவரம் விக்னேஷ் (20) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Cellphone stolen, two, arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...