சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார். நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் முக்கிய இடங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை செய்யப்படுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் எப்பொழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு என்பதால் ரயில் சேவை இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையில் உள்ள சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் ஆர்.பி.எஃப், டி.எஸ்.பி ராஜூ தலைமையில் ஆர்.பி.எஃப் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை நடத்தினர்.

Related Stories: