மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா தொற்று முன்பை விட பலமடங்கு அதிகரித்து கொண்டு வருகிறது. நாள்தோறும் 55 ஆயிரத்துக்கும் மேறபட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. மேலும் இந்த உச்சக்கட்ட கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன. மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.