மதுரை: மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணல் கடத்தல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் சிவலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆற்று மணல் அனுமதி விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.