தமிழகம் மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு: தீவிரமடைந்த மீட்பு பணி...!! Aug 12, 2020 மூணாறு ராஜமலை மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக நடந்த மீட்பு பணியில் 52 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 54- ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் புதுப்பிக்க ஆணை!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்
ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில் சிக்கிய நடிகையான எம்பி நவ்நீத் நள்ளிரவில் பாஜகவில் ஐக்கியம்: அமராவதி வேட்பாளராக உடனடி அறிவிப்பு
புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கால் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை கையகப்படுத்திய விவகாரம்; இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்களுக்கு கண்டனம்: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதம் முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல்
கலை, அறிவியல் கல்லூரிகளில் தனித்தனியாக விண்ணப்பம் இல்லை: வரும் கல்வியாண்டு முதல் ஒற்றைச் சாளர முறை அமல்