பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருபோதும் தலையிட மாட்டோம் என சீனா கூறியுள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனல்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் களத்தில் உள்ளார். இந்தத் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் ஊடுருவி தேர்தல் முடிவை மாற்ற முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்க தேர்தலில் தலையிட முயற்சி செய்வதாக அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிலையத்தின் இயக்குநர் வில்லியம் இவானினா குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மூன்று நாடுகளும் இணையம் வழியாக தவறான தகவல்களை பரப்பி வாக்காளர்களிடம் தங்களின் செல்வாக்கை செலுத்த முயற்சி செய்கின்றன.