சென்னை: தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் வரக்கூடிய நாட்களில் எடுக்க வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘கூட்டுறவு துறைக்கான அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.