×

திண்டிவனம் அருகே பெண்ணை மறுமணம் செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!!!

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை மறுமணம் செய்வதாக கூறி பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கள் பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவர் தனது கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆதிலட்சுமியை சிரஞ்சீவிராயன் பேட்டையை சேர்ந்த கணேஷ் என்பவர் திருமணம் செய்துகொள்வதாக, ஆசை வார்த்தைகளை கூறி மிக நெருக்கமாக பழகி உள்ளார்.

இதனையடுத்து ஒரு கோவிலில் வைத்து திருமணமும் நடைபெற்றுள்ளது. சிறிது நாட்களுக்கு பின் ட்ராவல்ஸ் நடத்துவதற்காக 12 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை ஆதிலட்சுமிடம் இருந்து கணேஷ் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் தொடர்ந்து ஆதிலட்சுமியை சந்தித்து பேசி வந்த கணேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளன.

இதனையறிந்த ஆதிலட்சுமி கணேஷின் வீட்டிற்கு சென்று கேட்டபோது, கணவரின் உறவினர்கள் அவரை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆதிலட்சுமி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட கணேஷை கைது செய்த மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tindivanam Man ,Tindivanam , Man arrested , Tindivanam,
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...