ஆசைஆசையாய் வளர்த்ததுங்க... நாயை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார்

சென்னை: தி.நகர் சவுந்திர நாராயணன் தெருவை சேர்ந்தவர் சாகர் (32). இவர், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், எனது வீட்டில் மோங்க்ரல் வகையை சேர்ந்த கருப்பு நிற 6 மாதமே ஆன லில்லி என்ற நாயை ஆசையாக வளர்த்து வந்தேன். எங்கள் வீட்டில் ஒரு குழந்தை போல் அந்த நாய் வளர்ந்து வந்தது. கடந்த 24ம் தேதி திடீரென வீட்டில் இருந்த நாய் லில்லி மாயமானது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். புகாரின்படி, மாம்பலம் போலீசார் காணாமல் போன நாயை சிசிடிவு பதிவு மூலம் தேடி வருகின்றனர். இதற்கிடையே நாய் உரிமையாளர் சாகர், தனது நாய் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories: