ராஜபாளையம்: கொரோனா பாதிப்பால், ராஜபாளையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு டாக்டர் உயிரிழந்துள்ளார். சமூகசேவை, இலக்கியப் பணிகளில் ஆர்வமுள்ள இரு டாக்டர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதால் ராஜபாளையம் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர் கோதண்டராமன் (66). இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜபாளையம் பகுதி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.