உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி கிராமம் தேரடித் தெரு, நடுத் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, ரோடு தெரு ஆகிய தெருக்களில் 200 கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கிராமத்தில் பலர் மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பதால், பலருக்கு குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தமான இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.