×

போலி டாக்டர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கணிகண்டீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (41). கடந்த சிலஆண்டுகளாக செந்தில்குமார், மாகரல் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், செந்தில்குமார், முறையாக மருத்துவம் படிக்கவில்லை என மருத்துவப் பணிகள் துறைக்கு புகார் சென்றது. அதன்பேரில், இணை இயக்குநர் ஜீவா மற்றும் அதிகாரிகள் மேற்கண்ட கிளினிக்கில் சோதனை நடத்தினர். அப்போது செந்தில்குமார் பிளஸ்2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்குமாரை பிடித்து, மாகரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.

Tags : doctor , Fake, doctor, arrested
× RELATED பூசணி விதையின் பயன்கள்!