காஞ்சிபுரம்: விவசாயத்துக்கு பிரதானமாக விளங்கும் உத்திரமேரூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருர் ஏரி 543 ஹெக்டேர் பரப்பளவு, 8 கிமீ நீளம் உள்ள கரைகளை கொண்டுள்ளது. இந்த ஏரி சுமார் 18 கிராமங்களில் உள்ள சுமார் 6000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியளிக்கிறது.
இதன் ஆழம் 20 அடி. ஆனால் தற்போதைய ஆழம் 10 அடி. இந்த ஏரி, ஆங்கிலேயர்கள் காலத்தில் 1891ம் ஆண்டு தூர் வாரப்பட்டது. அதன் பின்னர் 129 ஆண்டுகளாக தூர் வாரவில்லை. இதனால் ஏரியின் ஆழம் குறைந்து நீரின் கொள்ளளவு குறைகிறது.