காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஆற்றுப்படுகையில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனாலும், பல்வேறு இடங்களில் உள்ள ஆற்றுப் படுகையில் நள்ளிரவு நேரங்களில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரியில் மணல் கடத்தப்படுகிறது.