×

சிறுமிக்கு எஸ்பி பரிசு

திருவள்ளூர்: கீழ்நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது 7 வயது மகள் பூஜிதா. தனது பெற்றோர் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தாள். அந்த பணத்தை கொரோனா தொற்று காரணமாக காவலர்கள் 24 மணி நேரமும் கஷ்டப்படுவதால் காவலர்களின் நிவாரண பணிக்காக தான் சேமித்து வைத்த ரூ.1211.75ஐ கடந்த மாதம் 24ம் தேதி எஸ்.பி.அரவிந்தனிடம் நேரில் சென்று வழங்கினாள். இந்நிலையில், சிறுமி பூஜிதாவின் பிறந்த நாளான நேற்று அவளின் செயலை பாராட்டி எஸ்.பி. அரவிந்தன் சார்பில் மணவாளநகர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

Tags : SP , Little girl, sp, gift
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...