சோழவரம் காவல் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று

புழல்: சோழவரம் காவல் நிலையத்தில் நேற்று மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே காவல் நிலையம் வந்து செல்கின்றனர். சோழவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் மேலும் ஒரு உதவி ஆய்வாளர், இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஒரு காவலர் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், 4 பேரும் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழவரம் காவல் நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருவதால் புகார்கள் கொடுக்க வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: