×

ஆவின் தொழிலாளர்கள் 450 பேர் பணி நீக்கம்: முதல்வருக்கு பால்முகவர்கள் சங்கம் கடிதம்

சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனத்தின் மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளிலும், அம்பத்தூர் பால் பொருட்கள் தொழிற்சாலையிலும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த சுமார் 450 தொழிலாளர்களை நிர்வாக இயக்குனர் வள்ளலார் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதுபால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, முதல்வர் இவ்விவகாரத்தில் உடனே தலையிட்டு ஆவின் நிர்வாக இயக்குனர் பணி நீக்கம் செய்த தினக்கூலி பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


Tags : Spirit workers ,Milkmen ,Milkmen's Association , Spirit workers, 450 fired, dismissal, first, milkmen's association, letter
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...