டெல்லி: டெல்லி மாநிலத்தில் கொரோனா நடுநிலை காலத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,391 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.