சென்னை: ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த டிவிட்டர் பதிவில்: ரஷ்ய நாட்டில் உள்ள ேவால்கா நதியில் மூழ்கி நான்கு தமிழக மாணவர்கள் இறந்ததை அறிந்து மிகுந்த துயருற்றேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அக்குடும்பங்கள்துயரத்தில் இருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொள்கிறேன்.