கரூர்: ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (65), குப்பம்மாள் (60) தம்பதியின் மகள் முத்துலட்சுமி (29). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மணவாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷித் (3), தக்ஷித் (2) என இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டு பாலகிருஷ்ணன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் முத்துலட்சுமி, இரண்டு மகன்களுடன் பெற்றோருடன் கரூர் ராயனூரில் வசித்து வந்தார். நேற்றுவீட்டில் குழந்தைகளுடன் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். குழந்தைகள் இருவரும் அறையில் தூங்க, முத்துலட்சுமி ஹாலில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அதன் அருகிலேயே தரையில் மெத்தை விரித்து படுத்திருந்தார்.