புதுடெல்லி: கல்வி நிறுவனங்கள் வழங்கும் சில சேவைகளுக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சி.ஏ மற்றும் கணக்கியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஆந்திராவில் உள்ள ஒரு நிறுவனம், ஜிஎஸ்டி விலக்கு கோரி ஆந்திராவில் உள்ள ஜிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள், மேற்கண்ட படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் கட்டாயமல்ல. அதோடு, பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்பு முடித்ததற்கான சான்றுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதற்காக அவை அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டினர்.