சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள 70 ஆயிரம் பேருடன் அதிமுக ஐடி அணி: உள்ளாட்சி அளவில் நிர்வாகிகள் தேர்வு

சென்னை: சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியில் (ஐடி விங்) 70 ஆயிரம் பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலம், மாவட்டம், பஞ்சாயத்து யூனியன், ஊராட்சி அளவில் இதற்கான நபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஐடி பிரிவில் சேர்க்கப்பட தகுதியானவர்களை மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து தலைமைக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு மண்டல செயலாளரின் கட்டுப்பாட்டில் 13 பேர் அடங்கிய ஐடி குழு அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். கிராமப்புறங்களிலும் தகவல் தொழில்நுட்ப பிரிவை ஏற்படுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் ஒருவரை நியமிக்க அதிமுக ஐடி பிரிவு முடிவு செய்துள்ளது.  அதிமுகவின் அரசியல் ஆலோசகரான சுனில் கனுகோலு இந்த பணிகளை பின்னால் இருந்து இயக்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: