×

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் மாயம்: அதிகாரியிடம் உறவினர்கள் புகார்

தண்டையார்பேட்டை: கடந்த மாதம் 22ம் தேதி மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை காணவில்லை என உறவினர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளனர். காசிமேடு ஏ.ஜே காலனி 3வது தெருவை சேர்ந்த பாலாஜி (39) என்பவருக்கு  சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூரை சேர்ந்த மீனவர்கள் முருகன், தேசப்பன், கண்ணன், ரகு திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த பாபு, பார்த்திபன், சிவகுமார், லட்சுமணன், தேசப்பன் உள்ளிட்ட 9 மீனவர்கள் கடந்த மாதம் 22ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இதுவரை கரைக்கு வரவில்லை. அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இதனால் அவர்களது உறவினர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர் ஆகியோர் காசிமேடு எஸ்என் செட்டி சாலையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலனிடம் இதுபற்றி புகார் அளித்தனர். அதில், கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் திரும்பி வரவில்லை அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும், என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் மீன்வளத்துறை சார்பில் கடற்படையினர் உதவியுடன் மீனவர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது. மீனவர்கள் விசைப்படகு பழுது காரணமாக காணவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : fishermen ,sea ,officer ,Relatives , To the sea to fish, 9 fishermen, magic, officer, relatives complain
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்