×

26,000 ஊழியர்களுக்கு நோய் தடுப்பு மருந்து: டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
டாஸ்மாக் பணியாளர்கள் 26,000 பேருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்தில் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்கள் பயன்படுத்திடும் வகையில் சின்கோவிட் 150 கிராம் மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு பயன்படுத்திடும் வகையில் 3 மாதங்களுக்கு தேவையான ஜிங்கோவிட் 150 கிராம் மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரைகள், 200 கிராம் எடை கொண்ட கபசுர குடிநீர் மூலிகை பவுடர் ஆகியவைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Tasmac , 26,000 employees, vaccine, Tasmac management, information
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்...