பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு

கும்மிடிப்பூண்டி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி திஸ்வால் (55). தற்போது, பாப்பன்குப்பத்தில் வசித்து வருகிறார். இவர், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வடமாநில இளைஞர்களை வைத்து வேலைப்பார்த்து வருகிறார். தற்போது இளைஞர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஹைட்ரோ கார்பன் தொழிற்சாலை அருகே இரண்டு பேர் திடீரென வழிமறித்து கத்தியை காட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்து தப்பினர். இதுகுறித்து புகாரின்பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Related Stories: