×

மலைக்கிராமங்களில் பழுதடைந்த சோலார் விளக்குகள்: சீரமைக்க கோரிக்கை

வருசநாடு: வருசநாடு அருகே உள்ள மலைக்கிராமங்களில் பழுதடைந்த சோலார் விளக்குகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே அரசரடி, இந்திராநகர், பொம்மராஜபுரம்,  ஐந்தரைபுலி, நொச்சிஒடை, வெள்ளிமலை, குழிக்காடு, மஞ்சனூத்து, உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் மின்சார வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கிராம வீதிகள் மற்றும் வீடுகளுக்கு ஊராட்சி சார்பில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் உரிய பராமரிப்பில்லாதால், பெரும்பாலான சோலார் விளக்குகள் சில மாதங்களாக எரியாமல் உள்ளன.

பழுதடைந்த சோலார் விளக்குகளை சீரமைக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதிமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமங்களில் மின் வசதி இல்லாததால், வீடுகளுக்கும், வீதிக்கு ஒன்று என்றும் ஊராட்சி சார்பில் சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன. உரிய பராமரிப்பில்லாததால், பெரும்பாலான சோலார் விளக்குகள் பழுதடைந்து விட்டன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : mountain villages , Mountain village, faulty solar lights
× RELATED மாதக் கணக்கில் இருளில் மூழ்கித்...