×

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,35,525 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 87,773 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,45,636 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,116 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 21.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்மாநிலத்தில் இதுவரை 2.35 லட்சம் மக்கள் கொரோன வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 2,116 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,379 லிருந்து 44,386 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 6.34 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,53,010 லிருந்து 22,15,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14.80 லட்சத்திலிருந்து 15.35 லட்சமாக உயர்ந்துள்ளது.



Tags : Corona ,Andhra Pradesh , Andhra, Corona
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி