×

விமான விபத்துக்குள்ளான 2 மாதங்களுக்குப் பிறகு 193 பாகிஸ்தான் விமானிகளுக்கு போலி உரிமம் தொடர்பாக நோட்டீஸ்

இஸ்லாமாபாத்: ஒரு பெரிய ஊழலை அடுத்து 262 விமானிகளின் ஆய்வுப் பணிகளை முடித்த பின்னர் சந்தேகத்திற்குரிய பைலட் உரிமம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 193 விமானிகளுக்கு பாகிஸ்தானின் விமான ஒழுங்குமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மே மாதம் 22-ந் தேதி பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 97 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு விமானியின் அலட்சியமே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் பொது விமானிகளில் 30 சதவீதம் பேர் போலியான விமானி உரிமம் வைத்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

நாட்டில் 262 விமானிகள் ஆள் மாறாட்டம் மூலம் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் விமான விபத்துக்குள்ளான 2 மாதங்களுக்குப் பிறகு 193 பாகிஸ்தான் விமானிகளுக்கு போலி உரிமம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



Tags : pilots ,Pakistani ,plane crash , Pilot, Pakistani, fake license
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!