புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால், இந்தியாவில் இதுவரை 22,15,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 62,064 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 22,15,074 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,15,35,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 1007 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 44,386 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறி, மீண்டும் பழைய நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.