சென்னை: இந்திய குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையான ஆய்வு நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வெளிப்படையான ஆய்வு நடத்தி நேர்ந்திருக்கும் தவறுகளை களைத்து நீதி வழங்க வேண்டும் என கூறினார். 2019 குடிமைப்பணி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தவரின் சமூகநீதி தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது என கூறினார்.