×

மொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல் கசிந்ததால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம்: சுற்றுசூழல் அவசரநிலை பிரகடனம்!!


மொரீஷியஸ் : மொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியதில் அதில் இருந்த 1000 டன் பெட்ரோல் கசிந்ததால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 டன் எரிபொருளுடன் எம்.வி.வகாஷியோ, ஜூலை 25 அன்று இந்தியப் பெருங்கடல் தீவுக்கு வெளியே பயணித்துக் கொண்டிருந்தது.இந்த கப்பல் கடந்த மாதம் 15ம் தேதி சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் மோதி நின்றது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கின.

அதனை தடுக்கும் மொரீஷியஸ் அரசின் முயற்சிக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை. தற்போது வரை 1000 டன் பெட்ரோல் கடலில் கசிந்துவிட்டதாக தக்வல்கள் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து ஒட்டுமொத்த பெட்ரோலும் கடலில் கலந்து விடும் அபாயம் உள்ளதாக சுற்றுசூழல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பெட்ரோலை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பிரான்சிடம் மொரீஷியஸ் அரசு உதவி கோரியுள்ளது.  எனினும் எண்ணெய் கசிவு நெருக்கடி மோசமடைவதால் மொரீஷியஸ் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் பிரவிந்த் ஜுக்னாத் தனது சுட்டுரைக் கணக்கில் வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்தார். மேலும் வான்வழியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் பெரிய அளவிலான நீலக் கடல்கள் கசிவு மூலம் கறுப்பு நிறத்தில் மாறியிருந்ததை பதிவு செய்துள்ளன.

Tags : Mauritius , Mauritius, Rock, Cargo, Petrol, Hazard, Environment, Emergency, Declaration
× RELATED சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்