துணிக்கடையில் திருடிய மூவர் கைது

பொன்னேரி: பொன்னேரி என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ஜாபர் (40). இவர் பொன்னேரி புதிய தேரடி தெருவில் ரெடிமேட் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை மூடி விட்டு சென்றார். நள்ளிரவு 2:00 மணி அளவில் 4 வாலிபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நான்கு பைகளில் டீ சர்ட், பேண்ட், செருப்பு, ஷூ உள்ளிட்டவைகளை திருடிக்கொண்டு சென்றனர். அப்போது, அந்த பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னேரி போலீசார் 4 பேரை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் முத்துக்குமார் (18), அசாருதீன் (18), தினேஷ் (21) என தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து தப்பியோடிய மற்றொருவரை தேடுகின்றனர். அவர்கள் நான்கு பேரிடம் விசாரித்தபோது பிடிபட்ட வாலிபர் பொன்னேரி பெரியகாவணம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த தினேஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும், தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: