ஆவடி: சென்னை காவல் மாவட்டத்தில் நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கையொட்டி முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலை, போலீஸ் பூத் அருகில் எஸ்ஐ ரவி தலைமையில் ஊர்காவல் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வேகமாக பைக்கில் வந்தவரை போலீசார் மடக்கினார். ஆனால், பைக்கை நிறுத்தாமல் வேகமாக வந்த அவர், எஸ்ஐ ரவி மீது மோதினார். இதில், அவர் தூக்கி வீசப்பட்டு இடது காலில் முறிவு ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த ஊர்க்காவல் படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை அருகில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து பூட்டிவிட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.