விமான விபத்து, நிலச்சரிவில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல்

சென்னை: நிலச்சரிவிலும், விமான விபத்திலும் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கேரளா பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத் தொழிலாளர்கள் 24 பேர் உயிழந்த செய்தி பேரிடியாக வந்துள்ளது. இதே காலத்தில் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலர் உயிரிழந்த வேதனைச் செய்தியும் வெளியாகியுள்ளது.

தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு சட்ட விதிமுறைகள் இருந்தாலும் வேலையளிப்போர் தரப்பில் அவைகள் எதனையும் பின்பற்றவதில்லை என்பதால் விபத்துகள் தொடர்கின்றன. குடும்பங்களோடு மனித உயிர்களை பலி கொடுத்துள்ள துயரமாவது அலட்சிய மனப்பான்மைக்கு முடிவு கட்ட வேண்டும். நிலச்சரிவிலும், விமான விபத்திலும் பலியான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: