×

வெளிநாடுகளில் இருந்த 517 இந்தியர்கள் மீட்பு

சென்னை: அமெரிக்கா, சார்ஜா, அபுதாபி, கத்தார் நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 517 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். கத்தார் நாட்டின் தோகா நகரிலிருந்து 171 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. சார்ஜாவிலிருந்து 180 இந்தியர்களுடன் மீட்பு சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 70 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அபுதாபியிலிருந்து 96 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. முன்னதாக, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனை செய்யப்பட்டது. அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Tags : Indians , Abroad, 517 Indians, Redemption
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...