கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் முழு ஊரடங்கு மீறி திறந்து இருந்த இறைச்சி கடைக்கு வண்டலூர் தாசில்தார் அதிரடியாக சீல் வைத்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி மெயின் ரோட்டில் தாமஸ் (46) என்பவர் இறைச்சி கடை திறந்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வண்டலூர் தாசில்தாருக்கும், கூடுவாஞ்சேரி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.