காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியம், மாரத்தூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பள்ளியில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். வீடுகள், பள்ளிக்கூடத்திற்கு அருகாமையில் உள்ள மின்கம்பம் சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது அந்த மின்கம்பத்தில் முற்றிலும் சிமெண்ட் கான்கிரீட் உடைந்து எலும்புக்கூடு போல் வெறும் கம்பிகள் மட்டுமே தெரிகிறது.