காளையார்கோவில் அருகே பள்ளி குழந்தைகளை பயமுறுத்தும் மின்கம்பம்: அகற்ற கோரிக்கை

காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியம், மாரத்தூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பள்ளியில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். வீடுகள், பள்ளிக்கூடத்திற்கு அருகாமையில் உள்ள மின்கம்பம் சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது அந்த மின்கம்பத்தில் முற்றிலும் சிமெண்ட் கான்கிரீட் உடைந்து எலும்புக்கூடு போல் வெறும் கம்பிகள் மட்டுமே தெரிகிறது.

இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மின்கம்பத்தை மாற்றி தரக்கோரி இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவி–்ல்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு மின்கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: