×

அச்சத்தில் மக்கள்: செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,07,109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,786 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 14, 420 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,689 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 302 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 388 பேர் கொரோனாவால் . பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது. 3,000-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, விருதுநகர் மாவட்டத்திலும் இன்று ஒரேநாளில் மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை10,382 ஆக உயர்ந்துள்ளது.

Tags : districts ,Chengalpattu ,Corona ,Tiruvallur ,Virudhunagar , Chengalpattu, Tiruvallur, Virudhunagar, Corona
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை