சென்னை: மூணாறு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது மூணாறு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேட்டறிந்தார். மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.