×

சிங்கம்புணரியில் தொட்டி இருக்கு.. தண்ணீர் இல்ல

சிங்கம்புணரி: சிங்கம்புணரி நகரில் உள்ள 18 வார்டுகள் உள்ளன. இதில் சின்னச்செங்குண்டு பாரதி நகர், உப்பு செட்டியார் தெரு, நியூ காலனி தேத்தாங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் நீர்த்தேக்க தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதால் இவையின் போர்வெல்கள் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. இதனால் தண்ணீ் கொட்டிகள் காட்சிப்பொருளாக உள்ளன.

வீடுகளிலும் உள்ள போர்வெல்களில் தண்ணீர் இல்லாததால் பேருராட்சி வழங்கும் குடிதண்ணீரையே மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இப்பகுதி மக்கள் தண்ணீர் தேவைக்காக வீதி வீதியாக அலையும் நிலை உள்ளது. மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகம் தூர்ந்துபோன போர்வெல்களை மீண்டும் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதுடன், சேதமடைந்த தண்ணீர் தொட்டிகளையும் மாற்ற முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Singampunari , tank ,Singampunari, there, no water
× RELATED மது விற்றவர் கைது