கரூர்: புற்கள் வளர்ந்த நிலையில் உள்ள தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைப்படுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் முன்பு தெப்பக்குளம் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மகத் தேரோட்டம் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதோடு, புற்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.