×

சென்னையில் இன்று ஒரே நாளில் உயிர்கொல்லி கொரோனாவால் 16 பேர் உயிரிழப்பு!!!

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் உயிர்கொல்லி கொரோனாவால் 16 பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சென்னை ஸ்டான்சி அரசு மருத்துவமனையில் 2 பேர் உரிழந்துள்ளனர். அதாவது திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவரும், சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து ராஜூவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுப்பாக்கத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரும், சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவரும், சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒருவரும் உயிர்கொல்லி கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். எனவே கீழ்பாக்கம் அரசு மத்துவமனையில் மொத்தமாக 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சென்னை நுங்கப்பாக்கத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆண் உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 85 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே சென்னையில் மொத்தமாக நேற்றிரவு முதல் இன்று காலை வரை சுமார் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , 16 killed by corona in one day in Chennai today !!!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...