நியூயார்க்: அமெரிக்காவில் ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 3 சிறுவர்களை காப்பாற்ற முயன்ற சீக்கியர் ஆற்றில் மூழ்கி பலியானார். இந்தியாவில் இருந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சென்ற மன்ஜித் சிங், அங்கு லாரி நிறுவனம் ஒன்றை நடத்த பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், அவர் கடந்த புதன்கிழமை அவரது நண்பர்களுடன் பிரெஸ்னோ மாவட்டத்தில் உள்ள கிங்ஸ் ஆற்றங்கரையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிகள் இருவர், 10 வயது சிறுவனும் ஆற்று மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட நீர்ச்சுழலில் சிக்கி உயிருக்கு போராடினர். இதைக் கண்ட சிங் தனது தலைப்பாகையை அவிழ்த்து, துண்டு போல் நீட்டி அவர்களை காப்பாற்ற முயன்றார்.