சென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவலை தடுக்க சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இந்த வாரம் 8ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 10ம் தேதி அதிகாலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, இன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

அவசர மருத்துவ தேவைகளுக்கும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பணிகளுக்காகவும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. இதை மீறி வெளியில் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு  144ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330, 044-23452362 அல்லது 90031 30103 என்ற எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம், என காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories: