கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே இன்று பதவியேற்கிறார். இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான லங்கா மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் 59.9 சதவீத வாக்குகளுடன் அக்கட்சி 150 இடங்களை கைப்பற்றியது. ராஜபக்சேக்கு மட்டுமே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் விருப்ப ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது இலங்கை தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் பெறாத மகத்தான வெற்றி.இந்நிலையில், இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே 4வது முறையாக இன்று பதவியேறகிறார். கெலானியாவில் உள்ள புனித ராஜமகா விகாரியா புத்த கோயிலில் பதவியேற்பு விழா நடக்கிறது. அவருடன் 26 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது. இம்முறை ராஜபக்சேவும் ஒட்டுமொத்த குடும்பமும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. அவர்களில் நமல் ராஜபக்சே உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி தரப்படும் என கூறப்படுகிறது.