புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் ஓட்டல் தொழிலுக்கு கடும் நஷ்டம். பெரிய ஓட்டல், ரெஸ்டாரன்ட்களுக்கு பல கோடி இழப்பு. இதனால் உரிமையாளருக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. சில ரெஸ்டாரன்ட்கள் வாடகையில் தள்ளுபடி கேட்கின்றன. வாடகையை தாமதமாக செலுத்த அவகாசம், அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்பது போன்றவை தொடர்பாக ரெஸ்டாரண்ட்களுக்கும், கட்டிட உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உச்சம்பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்ட்கள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன. அதாவது, ஒரு வேளை உரிமையாளர் காலிசெய்ய சொல்லிவிட்டால், அங்கு வேறு ரெஸ்டாரண்ட்கள் வரக்கூடாது. அப்படி வருவதாக இருந்தால் காலி செய்பவர் அல்லது உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கி வர வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.